கோவை டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை - தொழில்நஷ்டம் காரணம் என விசாரணையில் தகவல்

கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டடத்தால் மனமுடைந்த டிராவல்ஸ் உரிமையாளர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. தினேஷ்குமார் சொந்தமாக வாகனங்கள் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தன்னிடம் இருந்த வாகனங்களை தினேஷ்குமார் விற்றுள்ளார். மேலும், தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் அவர் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளால் விரக்தியில் இருந்து வந்த தினேஷ்குமார், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவர் மனைவி அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...