தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார கொண்டாட்டம் - கோவையில் விழிப்புணர்வுப் பேரணி!

தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமிழில் கையொப்பம் இடுவோம், தமிழர் நாம் என்று கூறுவோம், தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள் என்று வலியுறுத்தினர்.



கோவை: 1956ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி இயற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்ட நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.



அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.

முதல் நாளான இன்று கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்தார்.



இந்தப் பேரணியில், அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமிழில் கையொப்பம் இடுவோம், தமிழர் நாம் என்று கூறுவோம், தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது போன்று தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி கலந்துகொண்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்த பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறைவடைந்தது.



முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். வரும் 28ஆம் தேதி வரை கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...