சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாளை வாக்களிக்க வேண்டும், முன்னாள் மேயர் ராஜ்குமார் பேட்டி


ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்காத சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு வர முடியாத சூழல் இருப்பதை உணர்ந்து பெரும்பான்மை கோரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நாளை நடைபெறும் பெரும்பான்மை நிரூபிக்கும் தேர்தலில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அத்தொகுதியின் பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை கணபதி பகுதியில் பன்னீர்செல்வம் ஆதரவாளரும் முன்னாள் மாநகர மேயருமான கணபதி ராஜ்குமார் தலைமையில் கூடிய அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினரான பி.ஆர்.ஜி அருண்குமார் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வாக்களிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். 

தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.அப்போது பேசிய கணபதி ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூவத்தூரில் இருப்பது மட்டுமே ஊடகங்கள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அவரது கவனத்திற்கு மக்களின் எண்ணங்களையும், கட்சி தொண்டர்களின் மன நிலையையும் எடுத்து கூறும் வகையில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வாக்களிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வாக்குகள் கோரி மக்களை சந்திக்க வர முடியாத நிலை இருப்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறிய அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு  இல்லாதவர்களும் கட்சியை கைப்பற்ற துடிக்கும் முயற்சியை முறியடிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...