உடுமலை அருகே அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதி விபத்து - 6 பேர் படுகாயம்!

உடுமலை அருகே வேடசந்தூரிலிருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி வேன், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில், ஆம்னி வேனில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்து, உடுமலை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: உடுமலை அருகே அரசு பேருந்து மீது, ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருபவர் சீனிவாசன். இவர் தனது ஆம்னி வேனில் குடும்பத்துடன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார்.



இந்நிலையில் ஆம்னி வேன் பாலப்பம்பட்டி அருகே வந்த போது, எதிரில் கோவையிலிருந்து பழனி சென்ற அரசு பேருந்து மீது மோதியது.



இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த சதீஷ்(25), ராஜேஸ்வரி(50), சிங்காரம்(60), வேணுகோபால்(80), பூவாத்தா(16) மற்றும் சீனிவாசன்(52) ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனக்ர்.

இதனிடையே விபத்து தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...