உடுமலை அருகே அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதி விபத்து - 6 பேர் படுகாயம்!

உடுமலை அருகே வேடசந்தூரிலிருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி வேன், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில், ஆம்னி வேனில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்து, உடுமலை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: உடுமலை அருகே அரசு பேருந்து மீது, ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருபவர் சீனிவாசன். இவர் தனது ஆம்னி வேனில் குடும்பத்துடன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார்.



இந்நிலையில் ஆம்னி வேன் பாலப்பம்பட்டி அருகே வந்த போது, எதிரில் கோவையிலிருந்து பழனி சென்ற அரசு பேருந்து மீது மோதியது.



இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த சதீஷ்(25), ராஜேஸ்வரி(50), சிங்காரம்(60), வேணுகோபால்(80), பூவாத்தா(16) மற்றும் சீனிவாசன்(52) ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனக்ர்.

இதனிடையே விபத்து தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...