மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து!

குன்னூர் அடுத்த காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வெலிங்டன் பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறை கல்லூரியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்த குடியரசு தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.


நீலகிரி: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் குன்னூர் பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10:30 மணிக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனிடையே குன்னூர் காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிற்பகல் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் டெல்லி செல்ல உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...