மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து!

குன்னூர் அடுத்த காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வெலிங்டன் பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறை கல்லூரியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்த குடியரசு தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.


நீலகிரி: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் குன்னூர் பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10:30 மணிக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனிடையே குன்னூர் காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிற்பகல் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் டெல்லி செல்ல உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...