மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து!

குன்னூர் அடுத்த காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வெலிங்டன் பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறை கல்லூரியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்த குடியரசு தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.


நீலகிரி: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் குன்னூர் பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10:30 மணிக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனிடையே குன்னூர் காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிற்பகல் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் டெல்லி செல்ல உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...