உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் - முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

உடுமலை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டத்தில், காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம், ஒன்றிய தலைவர் எலிசபெத் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி வழங்கும் பணியை சத்துணவு ஊழியர் பொறுப்பில் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் ஒன்றிய பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய துணைத் தலைவர் மாலதி, ஒன்றிய செயலாளர் ஆனந்தி, ஒன்றிய பொருளாளர் சகிலா பானு, ஒன்றிய இணைச் செயலாளர் சித்ரா, ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, கவிதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...