கோவைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை - ஆளுநர், அமைச்சர், டிஜிபி வரவேற்பு!

கோவை ஈஷாவில் இன்று நடைபெறவுள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் நேரில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



கோவை: கோவைக்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர், அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.



இதற்காக இன்று பிற்பகல் விமானம் மூலம் அவர் கோவைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அவர், ஓய்வு எடுப்பதற்காக அவினாசி சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை 6 மணியளவில் அவர், கார் மூலம் ஈஷா யோகா மையத்திற்கு சென்று மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் 6,900 போலீசார் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...