கோவைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை - ஆளுநர், அமைச்சர், டிஜிபி வரவேற்பு!

கோவை ஈஷாவில் இன்று நடைபெறவுள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் நேரில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



கோவை: கோவைக்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர், அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.



இதற்காக இன்று பிற்பகல் விமானம் மூலம் அவர் கோவைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அவர், ஓய்வு எடுப்பதற்காக அவினாசி சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை 6 மணியளவில் அவர், கார் மூலம் ஈஷா யோகா மையத்திற்கு சென்று மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் 6,900 போலீசார் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...