கோவை துடியலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திவான், நடராஜ், முத்துகுமார் என 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 34 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.


கோவை: துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துடியலூர், அப்பநாய்க்கன்பாளையம், சுப்ரமணியம்பாளையம், கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.



இதனை அடுத்து தனிப்படையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற திவான்(20), நடராஜ்(55) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கருங்கடலைச் சேர்ந்த முத்துகுமார்(31) என்பதும், அவர்கள் பல இடங்களில் வீடு புகுந்து நகைகள் திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...