பல்லடம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்!

பல்லடம் அருகே உகாயனூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வகுப்பு முடிந்து வேனில் வீடு திரும்பியபோது மாதப்பூரில் விபத்துக்குள்ளானது. விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகாயனூரில் ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களோடு பள்ளி முடிந்ததும் வாடகை வேனில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.



இந்த வேனை நாகராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். வேன் மாதப்பூர் வந்த போது எதிர்பாராத விதமாகப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறினர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.



இந்த விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனத்தைப் பொதுமக்கள் மீட்டனர். பின்னர் வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...