பல்லடம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்!

பல்லடம் அருகே உகாயனூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வகுப்பு முடிந்து வேனில் வீடு திரும்பியபோது மாதப்பூரில் விபத்துக்குள்ளானது. விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகாயனூரில் ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களோடு பள்ளி முடிந்ததும் வாடகை வேனில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.



இந்த வேனை நாகராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். வேன் மாதப்பூர் வந்த போது எதிர்பாராத விதமாகப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறினர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.



இந்த விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனத்தைப் பொதுமக்கள் மீட்டனர். பின்னர் வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...