குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய மிளகு - அறுவை சிகிச்சையின்றி அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!

மூச்சுக்குழாயில் மிளகு சிக்கியதால், மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன முறையில் பாதுகாப்பாக மிளகை அகற்றி உயிரை காப்பாற்றினர்.


கோவை: திருப்பூரைச் சேர்ந்த 1 வயது 4 மாத ஆண் குழந்தை திடீரென்று மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. சி.டி.ஸ்கேனில் அந்த குழந்தையின் மூச்சு குழாயில் அயல்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி சோதித்துப் பார்த்தபொழுது மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உள்நோக்குக் கருவி மூலம் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த மிளகு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

இந்த சிகிச்சையினை காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் பேராசிரியர் டாக்டர் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டனர்.

உரிய நேரத்தில் மருத்துவர்கள் அளித்த சரியான சிகிச்சையால் குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...