குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய மிளகு - அறுவை சிகிச்சையின்றி அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!

மூச்சுக்குழாயில் மிளகு சிக்கியதால், மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன முறையில் பாதுகாப்பாக மிளகை அகற்றி உயிரை காப்பாற்றினர்.


கோவை: திருப்பூரைச் சேர்ந்த 1 வயது 4 மாத ஆண் குழந்தை திடீரென்று மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. சி.டி.ஸ்கேனில் அந்த குழந்தையின் மூச்சு குழாயில் அயல்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி சோதித்துப் பார்த்தபொழுது மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உள்நோக்குக் கருவி மூலம் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த மிளகு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

இந்த சிகிச்சையினை காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் பேராசிரியர் டாக்டர் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டனர்.

உரிய நேரத்தில் மருத்துவர்கள் அளித்த சரியான சிகிச்சையால் குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...