குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய மிளகு - அறுவை சிகிச்சையின்றி அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!

மூச்சுக்குழாயில் மிளகு சிக்கியதால், மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன முறையில் பாதுகாப்பாக மிளகை அகற்றி உயிரை காப்பாற்றினர்.


கோவை: திருப்பூரைச் சேர்ந்த 1 வயது 4 மாத ஆண் குழந்தை திடீரென்று மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. சி.டி.ஸ்கேனில் அந்த குழந்தையின் மூச்சு குழாயில் அயல்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி சோதித்துப் பார்த்தபொழுது மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உள்நோக்குக் கருவி மூலம் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த மிளகு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

இந்த சிகிச்சையினை காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் பேராசிரியர் டாக்டர் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டனர்.

உரிய நேரத்தில் மருத்துவர்கள் அளித்த சரியான சிகிச்சையால் குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...