உடுமலையில் சிறு குறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்

திருபபூர் மாவட்டம் உடுமலையில் நடந்த சிறுகுறு தொழிலுக்கான கடன் முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விண்ணப்பங்களை அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிறு குறு தொழிலுக்கான கடன் வழங்கும் முகாம் வியாபாரிகள் சங்க அரங்கில் நடைபெற்றது. வியாபாரிகள் சங்க தலைவர் பால்நாகமாணிக்கம் முகாமிற்கு தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி வரவேற்றார்.



நிகழ்ச்சியில் பேசிய வியாபாரிகள் சங்க செயலாளர் எஸ்.குமரன், கடன் கேட்டு விண்ணப்பவர்களுக்கு தெரியாத விவரங்களை தெளிவுபடுத்தி உரிய வழிகாட்டுதல் வழங்கி வங்கி அதிகாரிகள் தாமதம் இன்றி கடன் வழங்க வேண்டும் என்றார்.



இந்த கடன் வழங்கும் முகாமிற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் செய்து இருந்தார். இந்த முகாமில், உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...