உடுமலையில் சிறு குறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்

திருபபூர் மாவட்டம் உடுமலையில் நடந்த சிறுகுறு தொழிலுக்கான கடன் முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விண்ணப்பங்களை அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிறு குறு தொழிலுக்கான கடன் வழங்கும் முகாம் வியாபாரிகள் சங்க அரங்கில் நடைபெற்றது. வியாபாரிகள் சங்க தலைவர் பால்நாகமாணிக்கம் முகாமிற்கு தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி வரவேற்றார்.



நிகழ்ச்சியில் பேசிய வியாபாரிகள் சங்க செயலாளர் எஸ்.குமரன், கடன் கேட்டு விண்ணப்பவர்களுக்கு தெரியாத விவரங்களை தெளிவுபடுத்தி உரிய வழிகாட்டுதல் வழங்கி வங்கி அதிகாரிகள் தாமதம் இன்றி கடன் வழங்க வேண்டும் என்றார்.



இந்த கடன் வழங்கும் முகாமிற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் செய்து இருந்தார். இந்த முகாமில், உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...