உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

உடுமலை அருகே போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பள்ளபாளையம் கிளை சார்பில் இன்று தொடங்கப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களிடம் போதைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் பள்ளபாளையம் கிளையில் துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில், உடுமலை முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் போதைக்கு எதிராக முதல் கையெழுத்திட்டுத் துவக்கிவைத்தார்.



சிஐடியூ செயலாளர் ஜெகதீசன், வி.தொ.ச கமிட்டி சுந்தரம், இயேசுராஜ் முன்னிலை வகித்தனர். இதில் உடுமலை பொருளாளர் குமரகுரு, கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, கருப்புச்சாமி, அஜீத்குமார் பெருமாள்சாமி, இமான் செந்தில்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் பொதுமக்களிடமும் கடை வீதிகளிலும் துண்டறிக்கை கொடுத்து போதைக்கு எதிராகப் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நூற்றுக் கணக்கானோரிடம் கையெழுத்துப் பெற்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...