ஈஷா மஹாசிவராத்திரி விழா - பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும்‌ கோவை!

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பிரம்மாண்ட விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை ஈஷாவின் மகா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ள நிலையில் கோவையில் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றன.

இதுதொடர்பாக ஈஷா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பழங்குடி சமூகத்தில்‌ இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர்‌ திரெளபதி முர்மு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில்‌ சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்‌.

குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு இவ்விழாவிற்காக அவர்‌ முதல்முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில்‌ நடைபெறும்‌ இவ்விழா உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பு பிப்‌ரவரி 18-ம்‌ தேதி மாலை 6 மணி முதல்‌ மறுநாள்‌ காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இவ்விழா தியானலிங்கத்தில்‌ நடைபெறும்‌ பஞ்ச பூத க்ரியையுடன்‌ தொடங்கும்‌. இதை தொடர்ந்து லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெறும்‌. பின்னர்‌, விழா மேடையில்‌ குடியரசு தலைவர்‌ மற்றும்‌ சத்குரு சிறப்புரை ஆற்ற உள்ளனர்‌.

அதன்‌ பிறகு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மேற்கு வங்கம்‌, ராஜஸ்தான்‌ உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த பிரபல கலைஞர்களின்‌ இசை நிகழ்ச்சிகள்‌ விடிய விடிய நடைபெறும்‌. இதற்கிடையில்‌ நள்ளிரவு மற்றும்‌ அதிகாலை பிரம்ம முஹூர்த்த காலத்தில்‌ சத்குரு வழிநடத்தும்‌ சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும்‌, சத்சங்கமும்‌ நடைபெறும்‌.

குறிப்பாக, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிரபல நாட்டுப்‌ புற கலைஞர்‌ கிரு. வேல்முருகன்‌, ராஜஸ்தானி நாட்டுப்‌ புற கலைஞர்‌ மாமே கான்‌, இசையமைப்பாளரும்‌, பிரபல சித்தார்‌ இசை கலைஞருமான நிலத்ரி குமார்‌, டோலிவுட்‌ பின்னணி பாடகர்‌ ராம்‌ மிரியாலா உள்ளிட்டோர்‌ பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்து கொள்ள உள்ளனர்‌.

விழாவிற்கும்‌ வருகை தரும்‌ லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இரவு முழுவதும்‌ மஹா அன்னதானம்‌ வழங்கப்படும்‌. கடந்தாண்டு ஆஸ்கர்‌ மற்றும்‌ கிராமி விருது விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு தமிழ்‌, இந்தி, தெலுங்கு, கன்னடம்‌, மராத்தி, சைனீஸ்‌, போர்ச்சுகீஸ்‌, ஸ்பானீஸ்‌, பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதுதவிர, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர்‌, நாகர்கோவில்‌ உட்பட தமிழ்நாட்டில்‌ 32 இடங்களில்‌ நடைபெறும்‌ ஈஷா மஹா சிவராத்திரி கொண்டாட்டங்களில்‌ பொதுமக்கள்‌ இலவசமாக நேரில்‌ பங்கேற்கலாம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...