கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்கம்

கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு புதியதாக பல் மருத்துவர் நியமிக்கப்பட்ட நிலையில், பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. தாமோதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை தொடங்கபட்ட பல் மருத்துவ சிகிச்சை பிரிவை எம்.எல்.ஏ தாமோதரன் இன்று திறந்து வைத்தார்.

கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் பல் மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக பல் சிகிச்சை பிரிவு தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனிடையே பல் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மருத்துவரை நியமித்து மக்கள் நல்வாழ்வுதுறை சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கபட்டது.



இந்த நிலையில் இன்று பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் வேலுமணி உள்பட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...