சமூகவலைதளங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இறந்ததாக பதிவு - கோவையில் மீண்டும் போஸ்டர் யுத்தம்!

அதிமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் பரப்பிய ஈபிஎஸ் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவையின் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.



கோவை: கோவை பொய் தகவலை பரப்பிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கண்டித்து கோவை முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோஷ்டி மோதல் காரணமாக அதிமுக கட்சி தலைவர்கள் சிதறி பயணித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம், ஒ பன்னீர் செல்வம் மறுபுறம் அதிமுகவின் தலைமையின் நாற்காலிக்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவும் தன் பங்குக்கு விட்டு வைப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுக்கின்றன.



அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர் ஒருவர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி மறைந்து விட்டதாக தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றார்.

இதனை கண்டித்து ஓ.பி.எஸ் தரப்பினர், பொய் தகவலை பரப்பிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர்.



இதனிடையே கோவையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜாகிர் உசேன் என்பவர் புகழேந்தி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வலைதளத்தில் பகிர்ந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கோவையின் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நீதிமன்ற வளாகம், அரசாங்கக் கலைக் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், குனியமுத்தூர், பீளமேடு என பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...