கோவை குப்பைத்தொட்டியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை மீட்பு - போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் திருமலைநாயக்கன்பாளையத்தில் குப்பைதொட்டியில் கிடந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை வீசிச் சென்றவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை திருமலைநாயக்கன்பாளையம் அருகே பெண் ஒருவர் குப்பைகளை பொறுக்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த சாக்கடை அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

அவர் அங்கு சென்று பார்த்தபோது சுமார் ஒன்றரை மாதம் ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பெயரில், அருகில் இருந்து பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து குழந்தையை குப்பைத் தொட்டி அருகே வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை தொட்டியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...