கோவை குப்பைத்தொட்டியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை மீட்பு - போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் திருமலைநாயக்கன்பாளையத்தில் குப்பைதொட்டியில் கிடந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை வீசிச் சென்றவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை திருமலைநாயக்கன்பாளையம் அருகே பெண் ஒருவர் குப்பைகளை பொறுக்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த சாக்கடை அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

அவர் அங்கு சென்று பார்த்தபோது சுமார் ஒன்றரை மாதம் ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பெயரில், அருகில் இருந்து பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து குழந்தையை குப்பைத் தொட்டி அருகே வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை தொட்டியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...