உடுமலை அரசுப்பள்ளியில் தமிழ் கண்காட்சி - பார்வையாளர்கள் உற்சாகம்!

உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் கண்காட்சியில் வைக்கப்பட்ட படைப்புகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கைத்திறன்களையும், கலைநயத்தையும் தமிழுடன் சேர்த்து வெளிப்படுத்தும் வகையிலான தமிழ் கண்காட்சி நடந்தது.



பள்ளித் தலைமை ஆசிரியர் கோப்பெருந்தேவி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர்கள் அனைவரும், வகுப்பு மாணவர்களை ஊக்குவித்து, தமிழ் பழமையை போற்றும் புதிய படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.



சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மூவேந்தர்களின் வீரம், கால்நடை வளர்ப்பு, விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்கள், வீரப்பெண்கள், கோவில்களின் சிறப்பு, வரலாற்று சிறப்புமிக்க கட்டமைப்புகள், கவிஞர்கள், புலமை, பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை சார்ட்களாகவும், படைப்புகளாகவும் புதுவிதமாக காட்சிப்படுத்தினர்.



இயல், இசை, நாடகத்தமிழை கண்முன் விருந்தளிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்தக் கண்காட்சியை, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் உடுமலை தமிழிசை சங்கத்தினர், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...