நீலகிரியில் குடியிருப்புகளை காலி செய்யும்படி நகராட்சி நிர்வாகம் உத்தரவு - பொதுமக்கள் சாலைமறியல்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கஸ்தூரிபாய் காலணியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ள நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மத்திய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி: உதகை அருகே காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காலணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்துவருகின்றன. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த மக்கள், ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உதகை நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, விலங்குகள் மருத்துவ மையம் அமைக்க முடிவு செய்து குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.



இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய பேருந்து நிலையம் முன் இன்று சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உதகை நகர போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு வந்த உதகை வட்டாச்சியர் குடியிருப்புகள் காலி செய்யப்பட வேண்டியதில்லை எனக் கூறி சமாதானம் செய்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...