நீலகிரியில் குடியிருப்புகளை காலி செய்யும்படி நகராட்சி நிர்வாகம் உத்தரவு - பொதுமக்கள் சாலைமறியல்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கஸ்தூரிபாய் காலணியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ள நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மத்திய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி: உதகை அருகே காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காலணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்துவருகின்றன. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த மக்கள், ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உதகை நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, விலங்குகள் மருத்துவ மையம் அமைக்க முடிவு செய்து குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.



இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய பேருந்து நிலையம் முன் இன்று சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உதகை நகர போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு வந்த உதகை வட்டாச்சியர் குடியிருப்புகள் காலி செய்யப்பட வேண்டியதில்லை எனக் கூறி சமாதானம் செய்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...