வஃக்பு வாரிய சொத்து மீட்பு விவகாரம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய திட்டம்!

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள வஃக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



கோவை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75வது பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய மாநாடு சென்னையில் வரும் மார்ச்மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுப் பணிகள் குறித்து நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.



இதில் பொள்ளாச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில இளைஞரணி தலைவர் முகமது யூனுஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ள 75வது பவள விழா மாநாட்டில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு மூன்றரை சதவீதத்தை உயர்த்தி ஏழு சதவீதமாக உயர்த்தவும் வலியுறுத்தப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், இளைஞர்களை நல்வழிப்படுத்த மது, கஞ்சா போன்ற போதைப்பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட தீர்க்கமான திட்ட ஆய்வை மாநாட்டில் பதிவு செய்யவுள்ளதாகக் கூறிய முகமது யூனுஸ், தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ளவஃக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்டெடுக்க போதுமான பணியாளர்கள் இல்லை என்றும்,

சிறந்த அலுவலர்களைநியமித்து வஃக்பு வாரிய சொத்துக்களை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநாட்டில் வலியுறுத்தப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...