வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் மறைந்து இருந்து தாக்கிய கரடி - மேற்பார்வையாளர் படுகாயம்!

கோவை வால்பாறையில் தேயிலைத் தோட்டத்திற்கு பதுங்கியிருந்த கரடி திடீரென தாக்கியதில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் புஷ்பராஜன் படுகாயம். வால்பாறை நகர்மன்றதலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் நேரில் நலம் விசாரித்து நிதியுதவி.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பன்னி மேடு தேயிலை தோட்டம். இங்குள்ள இரண்டாவது டிவிஷனில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளராக பணி புரிபவர் புஷ்பராஜன் (வயது 53). நேற்று வழக்கம்போல் அவர் தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது தேயிலைச் செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தேயிலை செடிகளுக்கு நடுவே மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென அவரது காலை கடித்தது. கரடியை பார்த்தவுடன் புஷ்பராஜன் பயங்கரமாக சத்தம் போட்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்களும் சத்தமிட்டபடியே ஓடி வந்ததால், அச்சமடைந்த கரடி அவரை விட்டுவிட்டு தப்பி ஓடியது.



கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உருளிகல் எஸ்டேட்டில் உள்ள மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



தகவல் அறிந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மருத்துவமனைக்கு சென்று, படுகாயமடைந்த புஷ்பராஜனை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதி உதவியும் வழங்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத்திற்குள் பதுங்கியிருந்து தாக்கிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...