தன்னை பார்த்து குறைத்த நாயை அரிவாளால் வெட்டிய நபர் ஜாமீனில் விடுவிப்பு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் தெருவில் நடந்து சென்றபோது நாய் குறைத்ததால், செந்தில்குமார் என்பவர் விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார்.


கோவை: தன்னை பார்த்துக் குறைத்த நாயை வெட்டியவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.

கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நல்லாம்பாளையம் புதுத்தோட்டம், மூன்றாவது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று இவரைப் பார்த்துக் குறைத்துள்ளது.

இதில் எரிச்சல் அடைந்த செந்தில்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் அந்த நாயை, வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதில் நாயின் கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த அங்கிருந்த கணுவாய் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரியாவின் புகாரைத் தொடர்ந்து செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர். அவரை கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...