திருடப்பட்ட ரூ.12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த நீலகிரி எஸ்.பி.!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் திருடப்பட்ட 12.50 லட்சம் மதிப்பிலான 152 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் இன்று வழங்கப்பட்டன. ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் எஸ்பி பிரபாகர் வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் சமூக வலை தள குற்றங்கள் தொடர்பாக 679 புகார்கள் வந்தன. அவற்றில் 67 புகார்களில் வழக்குகள் பதிவு செய்தூள்ள மாவட்ட சைபர் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



அதில், 181 செல்போன்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடித்து செல்லப்பட்டது. அவற்றில் 152 செல்போன்களை மீட்டுள்ள நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பளர் முன்னிலையில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், நீலகிரி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மூலமாக இதுவரை 6 கோடியே 16 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதில், 10 லட்சம் மீட்கபட்டு பாதிக்கபட்டவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. 4 கோடியே 40 லட்சம் ரூபாயை வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.



மேலும், தற்போது 12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.



52 செல்போன்கள் மீட்கும் பணி தொடர்கிறது, ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...