கோவை பி.என்.பாளையத்தில் பாஜக செயற்குழு கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் காயமடைந்த சம்பவத்திற்குக் கண்டங்களையும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் நகர பாஜக செயற்குழு கூட்டம் மண்டலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாஜக ஒன்றியக் கவுன்சிலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் சவுந்தரராஜன், ஒன்றிய பார்வையாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் பிரீத்தி லட்சுமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



செயற்குழு கூட்டத்தில், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் காயமடைந்த சம்பவத்திற்குக் கண்டங்களையும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ள செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இன்றி நடைபெற்று வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், பாஜக நிர்வாகிகள் கோபிநாத், யோகேஷ், பூபதி, வேணுகோபால் மரகதம் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...