கோவை பி.என்.பாளையத்தில் பாஜக செயற்குழு கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் காயமடைந்த சம்பவத்திற்குக் கண்டங்களையும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் நகர பாஜக செயற்குழு கூட்டம் மண்டலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாஜக ஒன்றியக் கவுன்சிலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் சவுந்தரராஜன், ஒன்றிய பார்வையாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் பிரீத்தி லட்சுமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



செயற்குழு கூட்டத்தில், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் காயமடைந்த சம்பவத்திற்குக் கண்டங்களையும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ள செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இன்றி நடைபெற்று வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், பாஜக நிர்வாகிகள் கோபிநாத், யோகேஷ், பூபதி, வேணுகோபால் மரகதம் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...