பேரூர் பெரியகுளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் - மருந்தக உரிமையாளருக்கு அபராதம்

கோவை பேரூர் பெரியகுளத்தில் தடையை மீறி மருத்துவ கழிவுகளைக் கொட்டிய தனியார் மருந்தக உரிமையாளருக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.



கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குளத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் இயங்கி வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் பெரிய குளக்கரையில் மாயாவாக்கி (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று வழக்கம் போல மரக்கன்றுகள் பராமரிப்பு பணிக்காக அவ்வமைப்பினர் சென்ற போது, குளக்கரையில் மாத்திரைகள், மருந்து என மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தன்னார்வலர்கள் உடனடியாக அவற்றைப் புகைப்படம் எடுத்து, பேரூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். மேலும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திலிருந்த தனியார் மருந்தக ரசீதுகளை ஒப்படைத்தனர்.



இதையடுத்து விசாரித்த செயல் அலுவலர் ஸ்ரீ அழகு பார்மா என்ற தனியார் மருந்தகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்நிலையில் பேரூர் பெரிய குளக்கரையில் மருத்துவ கழிவுகளைக் கொட்டிய மருந்தக உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத்துறை அதிகபட்ச அபராதம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...