கோவையில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி - பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

கோவை சிங்காநல்லூர் அருகே தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலை பள்ளி மற்றும் தோழமை அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே நடைபெற்ற ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே தோழமை அறக்கட்டளை மற்றும் தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி இணைந்து ரத்த தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.



இந்த இரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு கையில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

அப்போது பேசிய தோழமை அறக்கட்டளை நிறுவனர் பிரியதர்ஷினி தங்கராஜ் கூறுகையில், "கடந்த 13 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் ரத்ததான ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வருகிறோம். ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகள் இடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது" என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...