கோவையில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி - பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

கோவை சிங்காநல்லூர் அருகே தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலை பள்ளி மற்றும் தோழமை அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே நடைபெற்ற ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே தோழமை அறக்கட்டளை மற்றும் தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி இணைந்து ரத்த தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.



இந்த இரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு கையில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

அப்போது பேசிய தோழமை அறக்கட்டளை நிறுவனர் பிரியதர்ஷினி தங்கராஜ் கூறுகையில், "கடந்த 13 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் ரத்ததான ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வருகிறோம். ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகள் இடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது" என்றார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...