கோவை பீளமேட்டில் பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!

கோவை பீளமேடு பகுதியில் மதுபோதையில் கவரில் இருந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடிக்க முயன்றபோது,பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி திலீப் கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: பீளமேடு பகுதியில் வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் அசாம் மாநில வாலிபர்கள் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அணில் நாயக் என்ற வாலிபர் கடந்த 5ஆம் தேதி வேலை செய்து கொண்டிருந்த போது, இடிபாடுகளிலிருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றை அவரை கடிக்க முயன்றுள்ளது.

இதில் சுதாரித்துக் கொண்ட அவர், பாம்பை அடித்து கவரில் போட்டு வைத்துள்ளார். பின்பு அதை எடுத்துச் செல்லும் போது, அவருடன் மதுபோதையில் வந்த திலீப் கவுர் என்ற வாலிபர் கவரில் இருந்த பாம்பைப் பிடிக்க முயன்றுள்ளார். இதில் அந்த பாம்பு எதிர்பாராத விதமாக திலீப் கவுர் கையை கடித்துள்ளது.

வலியால் துடித்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கட்டுவிரியன் பாம்பு கடித்து அசாம் மாநில தொழிலாளி இறந்தது சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...