கோவை பீளமேடு பகுதியில் மதுபோதையில் கவரில் இருந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடிக்க முயன்றபோது,பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி திலீப் கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: பீளமேடு பகுதியில் வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் அசாம் மாநில வாலிபர்கள் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அணில் நாயக் என்ற வாலிபர் கடந்த 5ஆம் தேதி வேலை செய்து கொண்டிருந்த போது, இடிபாடுகளிலிருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றை அவரை கடிக்க முயன்றுள்ளது.
இதில் சுதாரித்துக் கொண்ட அவர், பாம்பை அடித்து கவரில் போட்டு வைத்துள்ளார். பின்பு அதை எடுத்துச் செல்லும் போது, அவருடன் மதுபோதையில் வந்த திலீப் கவுர் என்ற வாலிபர் கவரில் இருந்த பாம்பைப் பிடிக்க முயன்றுள்ளார். இதில் அந்த பாம்பு எதிர்பாராத விதமாக திலீப் கவுர் கையை கடித்துள்ளது.
வலியால் துடித்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கட்டுவிரியன் பாம்பு கடித்து அசாம் மாநில தொழிலாளி இறந்தது சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் அசாம் மாநில வாலிபர்கள் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அணில் நாயக் என்ற வாலிபர் கடந்த 5ஆம் தேதி வேலை செய்து கொண்டிருந்த போது, இடிபாடுகளிலிருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றை அவரை கடிக்க முயன்றுள்ளது.
இதில் சுதாரித்துக் கொண்ட அவர், பாம்பை அடித்து கவரில் போட்டு வைத்துள்ளார். பின்பு அதை எடுத்துச் செல்லும் போது, அவருடன் மதுபோதையில் வந்த திலீப் கவுர் என்ற வாலிபர் கவரில் இருந்த பாம்பைப் பிடிக்க முயன்றுள்ளார். இதில் அந்த பாம்பு எதிர்பாராத விதமாக திலீப் கவுர் கையை கடித்துள்ளது.
வலியால் துடித்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கட்டுவிரியன் பாம்பு கடித்து அசாம் மாநில தொழிலாளி இறந்தது சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.