கோவை பீளமேட்டில் பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!

கோவை பீளமேடு பகுதியில் மதுபோதையில் கவரில் இருந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடிக்க முயன்றபோது,பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி திலீப் கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: பீளமேடு பகுதியில் வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் அசாம் மாநில வாலிபர்கள் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அணில் நாயக் என்ற வாலிபர் கடந்த 5ஆம் தேதி வேலை செய்து கொண்டிருந்த போது, இடிபாடுகளிலிருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றை அவரை கடிக்க முயன்றுள்ளது.

இதில் சுதாரித்துக் கொண்ட அவர், பாம்பை அடித்து கவரில் போட்டு வைத்துள்ளார். பின்பு அதை எடுத்துச் செல்லும் போது, அவருடன் மதுபோதையில் வந்த திலீப் கவுர் என்ற வாலிபர் கவரில் இருந்த பாம்பைப் பிடிக்க முயன்றுள்ளார். இதில் அந்த பாம்பு எதிர்பாராத விதமாக திலீப் கவுர் கையை கடித்துள்ளது.

வலியால் துடித்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கட்டுவிரியன் பாம்பு கடித்து அசாம் மாநில தொழிலாளி இறந்தது சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...