கோவை பீளமேட்டில் பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!

கோவை பீளமேடு பகுதியில் மதுபோதையில் கவரில் இருந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடிக்க முயன்றபோது,பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி திலீப் கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: பீளமேடு பகுதியில் வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் அசாம் மாநில வாலிபர்கள் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அணில் நாயக் என்ற வாலிபர் கடந்த 5ஆம் தேதி வேலை செய்து கொண்டிருந்த போது, இடிபாடுகளிலிருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றை அவரை கடிக்க முயன்றுள்ளது.

இதில் சுதாரித்துக் கொண்ட அவர், பாம்பை அடித்து கவரில் போட்டு வைத்துள்ளார். பின்பு அதை எடுத்துச் செல்லும் போது, அவருடன் மதுபோதையில் வந்த திலீப் கவுர் என்ற வாலிபர் கவரில் இருந்த பாம்பைப் பிடிக்க முயன்றுள்ளார். இதில் அந்த பாம்பு எதிர்பாராத விதமாக திலீப் கவுர் கையை கடித்துள்ளது.

வலியால் துடித்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கட்டுவிரியன் பாம்பு கடித்து அசாம் மாநில தொழிலாளி இறந்தது சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...