கோவை குண்டுவெடிப்பு தினம் - மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

கோவையில் 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.



கோவை: கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 2050 மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் நாளை பிப்ரவரி 14 ஆம் தேதியையொட்டி கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



குறிப்பாக ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.



மேலும் வெளியே உட்கார்ந்து இருக்கும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, அசம்பாவித சம்பவங்களை தடுக்க 2 டிஐஜி, 4 போலீஸ் சூப்பிரண்டு, 18 உதவி ஆணையர், 225 கமெண்டோ போலீசார் உள்ளிட்ட 3000 பேர் கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...