மீண்டும் ஏறுமுகத்தில் ஆட்டோமொபைல் தொழில் - சந்தை மதிப்பீட்டாளர்கள் கருத்து!

நடப்பாண்டில் ஆட்டோமொபைல் தொழில் தொய்விலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதாக சந்தை மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றால் கடந்த மூன்று வருடங்களாக முடங்கி கிடந்த தொழில்துறை சமீபத்தில் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. அதில், முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் ஒன்றாக இருப்பது ஆட்டோ மொபைல் வர்த்தகம்.

குறிப்பாக கோவிட் பெருந்தொற்றால் தொழில்கள் செய்ய முடியாத நிலையில், ஆட்டோ மொபைல் தொழில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைப்பு மற்றும் விற்பனை மந்தம் ஆட்டோமொபைல் தொழில் வளத்தையே ஆட்டிப் படைத்தது.



இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்பொழுது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ மொபைல் தொழிலுக்கு ஓரளவுக்கு கை கொடுத்து அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது. அந்த வகையில், டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இரு சக்கர விற்பனை முந்தைய ஆண்டை விட நடப்பாண்டில் 14 % விற்பனை உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது அதற்கு முந்தைய ஆண்டுகளை விட 8 % குறைவு எனவும், 3 சக்கர வாகன விற்பனை பொறுத்தவரையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



அதேபோல், பயணிகளின் கார் விற்பனை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வர்த்தக வாகன விற்பனை 16 % உயர்ந்துள்ளது. பயணிகள் கார் விற்பனை சிறப்பாக நடைபெறுகிறது. அதேநேரத்தில் சிறிய கார்களின் விற்பனை சற்று தோய்வடைந்துள்ளது.



ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது புள்ளிவிவரம் சற்று ஏறி இறங்கினாலும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழில் துறை என்பது மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைத்துள்ளது.

கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்டோ மொபைல் சேவை என்பது அத்தியாவசியம் என்பதனால் இனிவரும் காலங்களில் சிறப்பான இடத்தை நோக்கி ஆட்டோமொபைல் வர்த்தகம் நகரும் என்று சந்தை மதிப்பீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...