ஏ.டி.எம்களில் கொள்ளை எதிரொலி - கோவை வாளையாறு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கோவையில் கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி மற்றும் வாளையாறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கோவை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைத்து ரூ.75 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கஅம்மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ஆந்திரா மற்றும் கேரளா எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதால், வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட எல்லையான கருமத்தப்பட்டி, கணியூர் சுங்கச் சாவடிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியை துவங்கிய நிலையில் வாளையாறு எல்லையிலும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழியே செல்லும் கார்களும் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த சோதனையின்போது,சந்தேகப்படும்படியாக இருக்கும் நபர்களின்முகவரிகளையும் போலீஸார் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...