ஏ.டி.எம்களில் கொள்ளை எதிரொலி - கோவை வாளையாறு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கோவையில் கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி மற்றும் வாளையாறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கோவை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைத்து ரூ.75 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கஅம்மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ஆந்திரா மற்றும் கேரளா எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதால், வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட எல்லையான கருமத்தப்பட்டி, கணியூர் சுங்கச் சாவடிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியை துவங்கிய நிலையில் வாளையாறு எல்லையிலும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழியே செல்லும் கார்களும் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த சோதனையின்போது,சந்தேகப்படும்படியாக இருக்கும் நபர்களின்முகவரிகளையும் போலீஸார் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...