ஏ.டி.எம்களில் கொள்ளை எதிரொலி - கோவை வாளையாறு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கோவையில் கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி மற்றும் வாளையாறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கோவை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைத்து ரூ.75 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கஅம்மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ஆந்திரா மற்றும் கேரளா எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதால், வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட எல்லையான கருமத்தப்பட்டி, கணியூர் சுங்கச் சாவடிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியை துவங்கிய நிலையில் வாளையாறு எல்லையிலும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழியே செல்லும் கார்களும் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த சோதனையின்போது,சந்தேகப்படும்படியாக இருக்கும் நபர்களின்முகவரிகளையும் போலீஸார் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...