கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் பற்றி எரிந்த மரத்தால் பரபரப்பு

மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பச்சை மரம் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.



கோவை: கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதி அருகே பற்றி எரிந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாலையோர மரம் ஒன்று உள்ளது.

இந்த மரத்தின் அருகே கல்லார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வருவது வழக்கம்.இந்த நிலையில் இன்று மாலை மரத்தின் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகளிலிருந்து புகை வரத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் பச்சை மரம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

மரத்தில் தீ மளமளவெனப் பரவி பற்றி எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும், மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரினை பீய்ச்சி அடித்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மரத்தின் அடியில் குப்பைகள் கொட்டிய இடத்தில் யாரோ தீ வைத்த உள்ளனர்.அதன் காரணத்தால் மரம் தீ பிடித்து எரிந்து உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் உதகை சாலையில் திடீரென பச்சை மரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...