திருப்பூர் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்!

உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே நீர்வழித்தடங்களில் மேம்பாலம் அமைக்கின்ற பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலங்கள் கட்டும் பணியின் போது தற்காலிக சாலை அமைத்து, அதில் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. மடத்துக் குளத்தில் இருந்து கணியூர், காரத்தொழுவு வழித்தடத் தில் வாகன ஓட்டிகள் தாராபுரம், கரூர் மேலும் திருச்சி வரை சென்று வருகின்றனர்.



முக்கிய வழித்தடமாக இந்த சாலையில் சோழமாதேவி மேடு அருகே உயர்மட்ட பாலம் கட்டும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிக்காக அருகிலேயே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தற்காலிக பாதை வழியே சென்று வருகிறது.



இருப்பினும் போக்குவரத்து நெரிசல் இன்றி தொடர மடத்துக்குளம் கழுகரையில் இருந்து பிரிந்து வேடப்பட்டி கிராமம் வழியாக கணியூர், காரத்தொழுவு சென்று செக்கான் ஓடை பகுதியில் மீண்டும் பழைய சாலையில் பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர். போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கழுகரையில் பிரிந்து மீண்டும் செக்கான் ஓடை வரை உள்ள மாற்று வழித்தடத்தில் பயணித்து வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...