உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே நீர்வழித்தடங்களில் மேம்பாலம் அமைக்கின்ற பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாலங்கள் கட்டும் பணியின் போது தற்காலிக சாலை அமைத்து, அதில் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. மடத்துக் குளத்தில் இருந்து கணியூர், காரத்தொழுவு வழித்தடத் தில் வாகன ஓட்டிகள் தாராபுரம், கரூர் மேலும் திருச்சி வரை சென்று வருகின்றனர்.

முக்கிய வழித்தடமாக இந்த சாலையில் சோழமாதேவி மேடு அருகே உயர்மட்ட பாலம் கட்டும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிக்காக அருகிலேயே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தற்காலிக பாதை வழியே சென்று வருகிறது.

இருப்பினும் போக்குவரத்து நெரிசல் இன்றி தொடர மடத்துக்குளம் கழுகரையில் இருந்து பிரிந்து வேடப்பட்டி கிராமம் வழியாக கணியூர், காரத்தொழுவு சென்று செக்கான் ஓடை பகுதியில் மீண்டும் பழைய சாலையில் பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்த அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர். போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கழுகரையில் பிரிந்து மீண்டும் செக்கான் ஓடை வரை உள்ள மாற்று வழித்தடத்தில் பயணித்து வருகின்றனர்.
உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே நீர்வழித்தடங்களில் மேம்பாலம் அமைக்கின்ற பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாலங்கள் கட்டும் பணியின் போது தற்காலிக சாலை அமைத்து, அதில் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. மடத்துக் குளத்தில் இருந்து கணியூர், காரத்தொழுவு வழித்தடத் தில் வாகன ஓட்டிகள் தாராபுரம், கரூர் மேலும் திருச்சி வரை சென்று வருகின்றனர்.
முக்கிய வழித்தடமாக இந்த சாலையில் சோழமாதேவி மேடு அருகே உயர்மட்ட பாலம் கட்டும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிக்காக அருகிலேயே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தற்காலிக பாதை வழியே சென்று வருகிறது.
இருப்பினும் போக்குவரத்து நெரிசல் இன்றி தொடர மடத்துக்குளம் கழுகரையில் இருந்து பிரிந்து வேடப்பட்டி கிராமம் வழியாக கணியூர், காரத்தொழுவு சென்று செக்கான் ஓடை பகுதியில் மீண்டும் பழைய சாலையில் பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்த அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர். போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கழுகரையில் பிரிந்து மீண்டும் செக்கான் ஓடை வரை உள்ள மாற்று வழித்தடத்தில் பயணித்து வருகின்றனர்.