திருப்பூர் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்!

உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே நீர்வழித்தடங்களில் மேம்பாலம் அமைக்கின்ற பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலங்கள் கட்டும் பணியின் போது தற்காலிக சாலை அமைத்து, அதில் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. மடத்துக் குளத்தில் இருந்து கணியூர், காரத்தொழுவு வழித்தடத் தில் வாகன ஓட்டிகள் தாராபுரம், கரூர் மேலும் திருச்சி வரை சென்று வருகின்றனர்.



முக்கிய வழித்தடமாக இந்த சாலையில் சோழமாதேவி மேடு அருகே உயர்மட்ட பாலம் கட்டும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிக்காக அருகிலேயே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தற்காலிக பாதை வழியே சென்று வருகிறது.



இருப்பினும் போக்குவரத்து நெரிசல் இன்றி தொடர மடத்துக்குளம் கழுகரையில் இருந்து பிரிந்து வேடப்பட்டி கிராமம் வழியாக கணியூர், காரத்தொழுவு சென்று செக்கான் ஓடை பகுதியில் மீண்டும் பழைய சாலையில் பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர். போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கழுகரையில் பிரிந்து மீண்டும் செக்கான் ஓடை வரை உள்ள மாற்று வழித்தடத்தில் பயணித்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...