உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை உரிமையாளர் ஒப்படைக்காமல் இருந்த நிலையில், ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

உடுமலை நகராட்சி பழனி சாலைக்கு அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கல்யாணி அம்மாள் லே அவுட் அமைந்துள்ளது. இங்கு நகர ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10.31 ஏக்கர் பரப்பளவில் உருவான மனைப்பிரிவின் நிலப்பரப்பில் குறிப்பிட்ட அளவு நிலம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.

அந்த வகையில் 76.61 சென்ட் சமுதாய நலக் கூடத்திற்கும், 11.69 சென்ட் வாசகர் அறை பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டு வகைப்பாடு செய்யப்பட்டது. இந்த இடத்தை அதன் உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



இந்த இடத்தை நகராட்சியால் சுவாதீன படுத்தப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் இந்த இடங்களை கிரயம் செய்ய வேண்டாம் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.



இதுபோல உடுமலை நகராட்சியால் மனை பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் ஒப்படைக்காமல் இருந்ததால் அவற்றை சுவாதீனப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...