தாராபுரம் அருகே பன்றிகளுக்கு மர்ம நோய் தாக்குதல் - அணையில் வீசப்பட்ட இறந்த பன்றிகளின் உடல்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மர்ம பன்றிகளுக்கு மர்ம நோய் தாக்கிய நிலையில் இறந்த பன்றிகளின் உடல்களை நல்லத்தங்கால் ஓடை நீர்த்தேக்க அணையில் வீசிச் சென்றதால் பரபரப்பு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணை. இந்த அணைக்கு பழனி சண்முகா நதி பகுதியில் மழை பெய்யும் போது உபரி நீர் அணைக்கு வந்து சேர்கிறது.



இந்த அணையின் மூலம் 6,300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அதேநேரம் குமாரபாளையம் கரையூர் பெரமியம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த அணை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் நல்லதங்காள் ஓடை அணை வாய்க்கால் பகுதியில் செந்தில், ரவி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் குடிசை போட்டு பன்றி வளர்ப்பு வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மர்ம காய்ச்சல் வந்துள்ளது. இதனால் பன்றிகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து இறந்துள்ளது.

இறந்த பன்றிகளை பன்றி வளர்க்கும் நபர்கள் குழி தோண்டி புதைக்காமல் இறந்த பன்றிகளை நல்லதங்காள் அணை வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர். இதனால் வாய்க்காலில் சென்று கொண்டிருந்த தண்ணீர் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

அணையின் தண்ணீரைபயன்படுத்தி வந்த கிராம மக்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு அணைப்பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்த நிலையில் ஆற்றில் மிதந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பொன்னிவாடி கிராமம் முழுவதும் கால்வாய் தண்ணீரை பயன்படுத்திய கிராம மக்களுக்குவயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு வருவதாகவும் அதனால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பொன்னிவாடி கிராமத்திற்கு வந்து மருத்துவ குழுவுடன் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் நல்ல தங்காள் நீர் ஓடை வாய்க்காலில் நோய்வாய் பட்டு இறந்த பன்றிகளை தூக்கி எறிந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடனடியாக நோய்வாய்ப்பட்டு இறந்த பன்றிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...