உடுமலையில் சின்னவெங்காய அறுவடைப் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம். வெங்காயத்தை இருப்புவைத்து விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் சொட்டு நீர் அமைத்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



விலை ஏற்ற இறக்கங்களை பொருத்தே சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் இதை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைத்த 40 நாட்களுக்கு பிறகு, அவற்றை பிடுங்கி நடவு செய்தும், விதை வெங்காயம் வாங்கியும் சாகுபடி செய்யப்படுகிறது.



இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:

ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். ஒரு ஏக்க ருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் திருப்புதல் என ரூ.60 ஆயிரம் முதல் ரூ. 70ஆயிரம் வரை செலவாகிறது.

சின்ன வெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். சின்ன வெங்காயம் 4 முதல் 5 மாதங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்து, விலை அதிமாகும் நேரங்களில் விற்பனை செய்கிறோம். இதனால், விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது.

சின்ன வெங்காயம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்போது அறுவடை செய்யப்படுகிறது.அறுவடை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்கப் பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...