மருதமலை கிரி வலப்பாதையில் வழிமறித்த யானை - பாசமுடன் வழி அனுப்பிய பக்தர்கள்

கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு கிரிவலம் சென்ற போது பக்தர்களை வழிமறித்த யானையை பாசத்தோடு பக்தர்கள் வழியனுப்பி வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: யானையை போ பா...போ பா...போங்க.. போ சாமி... என பாசமுடன் முருக பக்தர்கள் வழியனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள யானைகள்,மான்கள், காட்டுப்பன்றிகள் அவ்வப்போது வெளியே உலா வருகின்றன.

இந்நிலையில் மருதமலை முருகன் கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள் வனப்பாதை வழியாக கிரிவலம் மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த யானை அவர்களை வழிமறித்தது.

பக்தர்கள் இன்று மாலை பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு காட்டு யானை வந்திருக்கின்றன. பக்தர்கள் நடைபாதையில் யானை கடந்து சென்றிருக்கின்றன. அப்போது யானையை பார்த்த சிலர் புகைப்படம் எடுக்க முயன்றிருக்கின்றனர். யானை தடுப்பு சுவரில் ஏறி கிரிவல பாதையில் யானை நடந்து சென்றது.



அப்போது யானையை போ பா... போ பா... போங்க... போ சாமி... என பாசமுடன் முருக பக்தர்கள் வழியனுப்பினர்.

இந்த காட்சி அங்குள்ள பக்தர்களால் படம் பிடிக்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...