உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 2ம் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் நிறைவு!

பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ள கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.


கோவை: உக்கடம்-ஆத்துப் பாலம் இடையே இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.

இந்த மேம்பால பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால், பொள்ளாச்சி, மற்றும் பாலக்காடு, கேரளமாக பயணிப்பவர்களுக்கும், கோயமுத்தூர் தெற்கு மார்க்கமாக இருந்து கோவை மாநகரம் நோக்கி பயணிப்பவர்களுக்கு இலகுவான பயணம் அமையும்.



இந்நிலையில் முதல் கட்டமாக, உக்கடம் - ஆத்துப்பால மேம்பால கட்டுமான பணிகள் நடந்து முடிந்துள்ளன. உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறு விறுப்பாக நடந்து வருகிறது.



இந்த நிலையிலே ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உக்கடம் -ஆத்துப் பாலம் இடையே முதல் கட்ட மேம்பால பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் 70-80% நிறைவடைந்துள்ளது. உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இரண்டு இடங்களில் ஏறுதளமும், இரண்டு இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது. மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கையிலும் எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...