தாராபுரத்தில் சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து - தனியார் நிறுவன மேலாளர் உட்பட 2பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள நஞ்சியம்பாளையம் அருகே புறவழிச் சாலை மைய தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் நிறுவன மேலாளர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிந்தனர்.



தாராபுரம்- கொட்டமுத்தம்பாளையம் தெற்கு குடில்தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரஞ்சித்குமார்,(வயது 23). தெலங்கானா மாநிலம் மனோஜ் சோமநாதன், மகன் மனோஜ் விஸ்வநாதாச்சாரி (வயது 37). நேற்றிரவு இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.



தாராபுரம் புறவழிச் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே வந்துகொண்டிருந்தபோது நஞ்சியம்பாளையம் பாலம் பகுதியில் இவர்களது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை மைய தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில், தலையில் அடிபட்டு மூளை சிதறிய நிலையில் ரஞ்சித்குமார் மற்றும் மனோஜ்விஸ்வநாதாச்சாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் பலியான இருவரது உடல்களும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், இருவரும் அகலமான ரோட்டில் இருந்து குறுகலான ரோட்டிற்கு மாறும்போது இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பது கொட்டமுத்தம்பாளையம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...