தாராபுரத்தில் சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து - தனியார் நிறுவன மேலாளர் உட்பட 2பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள நஞ்சியம்பாளையம் அருகே புறவழிச் சாலை மைய தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் நிறுவன மேலாளர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிந்தனர்.



தாராபுரம்- கொட்டமுத்தம்பாளையம் தெற்கு குடில்தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரஞ்சித்குமார்,(வயது 23). தெலங்கானா மாநிலம் மனோஜ் சோமநாதன், மகன் மனோஜ் விஸ்வநாதாச்சாரி (வயது 37). நேற்றிரவு இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.



தாராபுரம் புறவழிச் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே வந்துகொண்டிருந்தபோது நஞ்சியம்பாளையம் பாலம் பகுதியில் இவர்களது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை மைய தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில், தலையில் அடிபட்டு மூளை சிதறிய நிலையில் ரஞ்சித்குமார் மற்றும் மனோஜ்விஸ்வநாதாச்சாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் பலியான இருவரது உடல்களும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், இருவரும் அகலமான ரோட்டில் இருந்து குறுகலான ரோட்டிற்கு மாறும்போது இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பது கொட்டமுத்தம்பாளையம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...