உடுமலையில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

உடுமலை கால்நடை மருத்துவனை சார்பில், நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாமில், ஏராளமான பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற செல்ல பிராணிகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உடுமலை கால்நடை மருத்துவமனை சார்பில், நேதாஜி மைதானத்தில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.



திருப்பூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தலைமை மருத்துவர், செல்லப் பிராணிகளால் பரவும் நோய்கள் குறித்து விளக்கினார்.

நாய்கள் வளர்ப்போர் 3 மாத காலத்தில் இருந்து ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். ஆண்டு தோறும் தடுப்பூசி போட வேண்டும். பிராணிகள் கடித்தால் கடித்த இடத்தில் சூடு வைப்பது, மஞ்சள் தடவுவது, உப்பு தண்ணீர் ஊற்றுவது, கிருமிநாசினி தடவுவது கூடாது. பதிலாக கடித்த பகுதியில் சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட வேண்டும். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், என்றார்.



மேலும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வம் கூறுகையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் நகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் அருகில் வசிப்போருக்கு தொல்லையின்றி வளர்க்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே பிராணிகளை வளர்க்க வேண்டும், என்றார்.

இந்த முகாமில், கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பராமரிப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...