ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி அகடமிக் எக்ஸலன்ஸ் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி டெல் இஎம்சி சென்டர் ஆப் அகடமிக் எக்ஸலன்ஸ் இன் டேட்டா சையின்ஸ் அன்டு பிக் டேட்டா அனலட்டிக்ஸ்- ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.



கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழக அளவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியே முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இக்கல்லூரி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை ஐசிடி அகடமி ஆப் தமிழ்நாடு வழங்கியுள்ளது.

டெல் டெக்னாலஜிஸ் சமீபத்தில் இம்சி கார்ப்பரேஷனை வழங்கியது. அது முதல் டெல் இஎம்சி சென்டர் ஆப் அகடமிக் எக்ஸலன்ஸ் இன் டேட்டா சையின்ஸ் அன்டு பிக் டேட்டா அனலட்டிக்ஸ் மையங்களை தமிழகத்தில் 5 கல்வி நிறுவனங்களில் இதுவரை நிறுவியுள்ளது. இந்திய அளவில் 50 கல்வி நிறுவனங்களில் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் அகடமிக் எக்ஸலன்ஸ் மையத்தை ஏன்செட் இந்தியா நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களின் தொடர்பு பிரிவின் தலைவர் அபிஜித் ஸ்ரீனிவாஷ் தொடக்கி வைத்தார். டெல் நிறுவனத்தைச் சேர்ந்த துணைப் பொது மேலாளர் ஜி.சரவணன், இம்மையத்திற்கான பொருப்பினை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் செயளர் சுவாமி கரிஸ்தானந்தா-விடம் ஒப்படைத்தார்.

இக்கல்லூரியின் முதல்வர் சி.ஜெயபாலகிருஷ்ணன், இயக்குனர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் கணினி அறிவியல் துறை டீன் மற்றும் தலைவர் கந்தப்பன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.



Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...