மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில்: புதிய டீசல் என்ஜினுடன் சேவை தொடக்கம்!

குன்னூர் ரெயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்ட புதிய ரெயில் எஞ்சின் இணைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம்சீனிவாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



திருப்பூர்: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என்.சிங் சேலம், பாலக்காடு, திருப்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்தார். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.



பின்னர் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர் .என். சிங் ரயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பால நடைபாதையை பார்வையிட்டார்.



தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்ட பிரேக்ஸ்மேன் ஓய்வறையை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்ட பர்ன்ஸ் ஆயில் என்ஜின், குன்னூர் ரயில்வே பணிமனையில் டீசல் ரயில் எஞ்சினாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.



புதிதாக மாற்றிவடிவமைக்கப்பட்ட டீசல் என்ஜின், மலை ரெயிலில் இணைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேலாளர் ஹரிகிருஷ்ணா மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தென்னக ரயில்வே பொது மேலாளர் மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புறப்பட்டு சென்றனர்.

செல்லும் வழியில் கல்லாறு அடர்லி ஹில் குரோவ், குன்னூர் ஆகிய மலைப்பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...