மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில்: புதிய டீசல் என்ஜினுடன் சேவை தொடக்கம்!

குன்னூர் ரெயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்ட புதிய ரெயில் எஞ்சின் இணைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம்சீனிவாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



திருப்பூர்: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என்.சிங் சேலம், பாலக்காடு, திருப்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்தார். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.



பின்னர் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர் .என். சிங் ரயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பால நடைபாதையை பார்வையிட்டார்.



தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்ட பிரேக்ஸ்மேன் ஓய்வறையை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்ட பர்ன்ஸ் ஆயில் என்ஜின், குன்னூர் ரயில்வே பணிமனையில் டீசல் ரயில் எஞ்சினாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.



புதிதாக மாற்றிவடிவமைக்கப்பட்ட டீசல் என்ஜின், மலை ரெயிலில் இணைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேலாளர் ஹரிகிருஷ்ணா மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தென்னக ரயில்வே பொது மேலாளர் மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புறப்பட்டு சென்றனர்.

செல்லும் வழியில் கல்லாறு அடர்லி ஹில் குரோவ், குன்னூர் ஆகிய மலைப்பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...