மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில்: புதிய டீசல் என்ஜினுடன் சேவை தொடக்கம்!

குன்னூர் ரெயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்ட புதிய ரெயில் எஞ்சின் இணைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம்சீனிவாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



திருப்பூர்: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என்.சிங் சேலம், பாலக்காடு, திருப்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்தார். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.



பின்னர் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர் .என். சிங் ரயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பால நடைபாதையை பார்வையிட்டார்.



தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்ட பிரேக்ஸ்மேன் ஓய்வறையை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்ட பர்ன்ஸ் ஆயில் என்ஜின், குன்னூர் ரயில்வே பணிமனையில் டீசல் ரயில் எஞ்சினாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.



புதிதாக மாற்றிவடிவமைக்கப்பட்ட டீசல் என்ஜின், மலை ரெயிலில் இணைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேலாளர் ஹரிகிருஷ்ணா மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தென்னக ரயில்வே பொது மேலாளர் மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புறப்பட்டு சென்றனர்.

செல்லும் வழியில் கல்லாறு அடர்லி ஹில் குரோவ், குன்னூர் ஆகிய மலைப்பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...