கோவையில் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி சிகிச்சை கருத்தரங்கு - வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பதாக சங்க தலைவர் தங்கவேலு தகவல்!

இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் (IAGES) சங்கம் சார்பில் கோவையில் வரும் பிப்.10 முதல் 12 வரை நடைபெறவுள்ள கருத்தரங்கில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களும் பங்கேற்கின்றனர்.



கோவை: இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (IAGES) சார்பில் சிறப்பு கருத்தரங்கு, கோவையில் வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (IAGES) கடந்த 1993ஆம் துவங்கப்பட்டு, இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், பங்களாதேஷ் நேபால் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பத்தாயிரம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இரைப்பை குடல் தொடர்பான சிகிச்சையில் நவீன மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு, மற்றும் ஆய்வு கட்டுரைகளை தொடர்ந்து நடத்தி வரும் இச்சங்கத்தின் இருபதாவது தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு, மற்றும் பொருளாளர் டாக்டர் மாதேஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:



கோவையில் வரும் 10ஆம் தேதி துவங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் 2000க்கும் மேற்பட்ட இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ள உள்ளனர்.

அனுபவம் மற்றும் புகழ்மிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளனர். இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் அறுவை சிகிச்சைகள் குறித்து இளம் நிபுணர்களுக்கு நேரடி ஒளிபரப்பின் வாயிலாக காண்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கருத்தரங்கில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான கங்காதர், கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, ஈஷா அமைப்பின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...