கோவை கே.ஜி.சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவி காட்சியின் மூலம் கொள்ளையனை பிடித்த போலீஸ்!

கோவை குட்டிகவுண்டன்பதி பகுதியில் விவசாயி ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணத்தை திருடிவிட்டு மற்றொரு வீட்டில் திருட முயன்ற இளைஞரை, சிசிடிவி காட்சி உதவியுடன் கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கே.ஜி.சாவடி அடுத்த குட்டிகவுண்டன்பதி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (53). விவசாயியான இவர், நேற்று தனது விவசாய நிலத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து விவசாயப் பணி மேற்கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.15,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி தங்கவேல் கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாளையார் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.



இந்த விசாரணையில் பிடிபட்ட நபர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அபூபக்கர் (22) என்பதும், விவசாயி தங்கவேலுவின் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும், மற்றொரு வீட்டில் திருடமுயன்றதும் தெரியவந்தது.

மேலும், அவர், தற்போது நவக்கரை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...